இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!!முஸ்லிம்களை ஏமாளிகளாக்கும் கோமாளித் தலைவர்கள்!!
கொள்கை மனிதர்கள் விற்பனையாகுவதில்லை. ஆம், முட்டாள்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. அறிவாளிகள் தாம் முஸ்லிம்களாக இருக்க முடியும். ஆடுகளாக, ஆம், மந்தைகளாக நாம் இருக்க முடியாது. ............
.........அண்ணன் பி.ஜே.யும் தி.மு.க கூடாரத்தில் மூக்கை நுழைப்பது தன்னைப் பின்பற்றும் தொண்டர்களை ஏமாளியாக்கும் கோமாளித்தனம். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டத்தைக் கூட்டுவதும், பொய்யைச் சொல்லி பையை நிரப்புவதும் கோடிகளுக்கு குப்புற விழுவதும் தன்னை நம்பி வந்த தொண்டர்களை முட்டாளாக்குவதும், இரட்டை நாக்கைச் சுழற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. அரசியலை புறக்கணித்த புஸ்வானங்களின் வான வேடிக்கை பட்டியல் இதோ,
வாழ்வுரிமை மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சைப் பேரணி தி.மு.க ஆதரவு, கும்பகோணம் மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சை வல்லம் மாநாடு தி.மு.க ஆதரவு. போலி நாடகம் நடத்திய அரசியல் துறவிகளின் போலி வேஷத்திற்கு பலியாகி விடாதீர்கள். பொய் சாக்கு சொல்லி விற்பனையாகும் சூழ்ச்சியில் விட்டிலாய் வீழ்ந்து விடாதீர்கள்.

0 comments:
Post a Comment