Monday, May 4, 2009

திரு. இரகுமான்கானுடன் சந்திப்பு


இராமநாதபுரம் மே. 05, தி.மு.க வின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பாளரும் முன்னால் அமைச்சருமான திரு. ரஹ்மான்கான் அவர்கள் தேர்தல் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர். திரு. அக்பர் ராஜா B.A.B.L மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. முகவைத்தமிழன் ஆகியோரை நேற்று இராமநாதபுரத்தில் உள்ள இராஜ இராஜேஸ்வரி டவரில் சந்தித்து கலந்ரையாடினார்.

இந்த தேர்தலில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பரப்புரைகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் ஒன்றிய ரீதியாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி, அவற்றை தி.மு.க விற்கு ஆதரவாக திரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் திரு. இரகுமான் கான் அவர்கள் அறந்தாங்கி, திருவாடானை பகுதிகளில் பிரச்சாரத்தை சற்று கடுமையாக்க கோரினார், மற்றும் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தீவிர செயல்பாடுகள் குறித்து தி.மு.க தலைமையிடம் எடுத்து கூறுவதாகவும் கூறினார். I.D.M.K மாவட்ட தலைவர் வழக்கறிஞர். திரு. அக்பர் ராஜா B.A.B.L மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. முகவைத்தமிழன் ஆகியோருக்கு தனது பாராட்டுக்களையும் வாழத்துக்களையும் தெறிவித்து கொண்டார்.

0 comments:

Template by - Abdul Munir - 2008 - layout4all